முகலாயப் பேரரசு: ஹூமாயூன் மீண்டும் வருதல், அக்பர் மற்றும் அவரது நிர்வாக சீர்திருத்த முறைகள்

ஹூமாயூன் மீண்டும் வருதல் 

  • ஷெர்ஷா 1545 இல் காலமானார். அவருக்கு பின் வந்த அரசர்கள் வலிமைக் குன்றியவர்களாக இருந்தனர். மேலும் அவர்களுடைய ஆட்சி அடுத்த 10 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.
  • கன்னோசிப் போரில் தோற்று தப்பி ஓடிய ஹூமாயூன்  பாரசீகத்தில் தஞ்சம் புகுந்தார்.
  • பின்னர் பாரசீக படைகளுடன் ஆப்கானிஸ்தான் சென்ற ஹூமாயூன் காபூலையும் காந்தகாரையும் கைப்பற்றினார்.
  • ஆனால் அவருடைய சகோதரரான கம்ரான் அவர் கைப்பற்றிய பகுதிகளை அமைதியாக ஆட்சி புரிய ஹூமாயூனை அனுமதிக்கவில்லை.
  • சகோதரர்களுக்கிடையே ஆன இந்த போராட்டம் சமாதானத்தில் முடிந்தது.
  • சூர் பேரரசு பல துண்டுகளாக சிதைவடைந்தது. இதனால் ஹூமாயூனுக்கு தில்லி மீதானப் படையெடுப்பு எளிதானது.
  • பாரசீக அரசர் சபாவிட் வம்சத்தை சேர்ந்த ஷா தாமஸ் என்பவரின் உதவியால் கி.பி 1555 டெல்லியை மீண்டும் கைப்பற்றினார் ஹூமாயூன்.
  • ஆனால் மிக விரைவிலேயே 1556-ல் டெல்லி கோட்டைக்குள் இருந்த நூலகம் ஒன்றின் மாடிப்படிகளில் இடறி விழுந்து இறந்து போனார்.

📌 வாழ்க்கை முழுவதும் தவறி விழுந்த ஹூமாயுன் வாழ்க்கையை விட்டே தவறி விழுந்தார் - லேன்பூல்


 
அக்பர் கிபி 1556 - 1605  

  • ரஜப்புதனத்து பாலைவனங்களில் ஹூமாயூன் அலைந்து திரிந்த பொழுது அவருக்கு கி.பி 1542ல் அக்பர்(ஜலாலுதீன்) பிறந்தார் .
  • அக்பர் 14 வயதில் முடி சூட்டிக்கொண்டார் அக்பர் சிறுவனாக இருந்ததால் பைராம் கான் பகர ஆளுநர் பொறுப்பேற்று அக்பர் சார்பாக ஆட்சி புரிந்தார்.
Akbar : Mughal Empire

இரண்டாம் பானிபட் போர் கிபி 1556 

  • சூர் வம்சத்தை சேர்ந்த இந்துப் படைத்தளபதியான ஹெமு (ஆப்கானி அரசன் அடில்ஷாவின்( ஷெர்ஷாவின் வழிவந்தவர்) படை தளபதி ) கிபி 1556-ல் டெல்லியையும் ஆக்ராவையும் கைப்பற்றிக் கொண்டார்.
  • அக்பர் கிபி 1556 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியை நோக்கி புறப்பட்டு ஹெமுவை இரண்டாம் பானிபட் போரில் சந்தித்தார்.
  • போர் ஹெமுவுக்கு சாதகமாக முடியவிருந்த நிலையில் கண்ணில் அம்பொன்று பாயவே ஹெமு மயக்கமுற்று கீழே விழுந்தார். தலைமை இல்லாத ஆப்கானிய படைகளை முகலாயப் படைகள் வெற்றி கொண்டன.
  • ஹெமு கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
  • இவற்றின் மூலம் அக்பருக்கு ஆக்ரா மற்றும் தில்லி மீண்டும் கிடைத்தது. முகலாய பேரரசு மீண்டும் நிறுவப்பட்டது.

அக்பரும் பைராம்கானும் 

  • அக்பரின் முதல் நான்கு ஆண்டு ஆட்சி காலத்தில் பகர ஆளுநர் பைராம் கானின் நாடு குவாலியர் அஜ்மீர் உட்பட காபூலில் இருந்து ஜான்சி வரை விரிவடைந்தது .
  • தன் சாதனைகளின் காரணமாக பைராம்கான் ஏனைய பிரபுக்களிடம் ஏளனத்துடன் நடந்து கொண்டார்.
  • அன்றாட ஆட்சி விவகாரங்களில் பைராம்கானின் மேலாதிக்கத்தை அக்பரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனால் அக்பர் பைராம்கானை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.இதன் விளைவாக பைராம்கான் கலகம் செய்தார்.
  • அக்பர் பைராம்கானை அழைத்து மெக்காவுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் செல்லும் வழியில் ஆப்கானியன் ஒருவனால் பைராம்கான் கொல்லப்பட்டார்.
  • பைராம்கானின் குடும்பம் டெல்லிக்கு அழைத்துவரப்பட்டது. பைராம்கானின் மகன் அப்துல் ரகீம் அறிவுக்கூர்மை மிக்க மேதையாக கான்-இ- கானான் என்ற பட்டத்துடன் அக்பரின் அவையில் ஒளிர்ந்தார்.

அக்பரின் போர் வெற்றிகள்


Mughal Empire under Akbar Rule

  • 1562 இல் மாளவம் கையகப்படுத்தப்பட்டது. அதன் ஆட்சியாளரான பாஜி பகதூர் அக்பரின் அரசவையில் மன்சப்தாராக ஆக்கப்பட்டார் .
  • அக்பர் 1564 ஆம் ஆண்டு கோண்டுவானாவை (இந்தியாவின் மையப்பகுதி) ஆட்சி புரிந்த இராணி துர்காவதி மற்றும் அவரின் மகன் வீரநாராயணனுடன் கடும் போர் புரிந்து அப்பகுதியை கைப்பற்றினார் .
  • மேவாரின் அரசன் உதயசிங்குடன் ஆறு மாத காலம் போரிட்டு இறுதியில் சித்தூர் கையகப்படுத்தப்பட்டது. இப்போரில் ராணா உதய்சிங் பின்வாங்கவே (குன்றுகளுக்குள்) அவருடைய தளபதியான ஜெய்மால் , பட்டா ஆகியோர் தொடர்ந்து போரிட்டனர். இப்போரில் முப்பதாயிரம் ரஜபுத்திர வீரர்கள் கொல்லப்பட்டனர்.
  • அக்பர் ஜெயமால் , பட்டா ஆகியோரின் துணிச்சலை கண்டு வியந்தார். அவர்களை சிறப்பிக்கும் பொருட்டு அவர்களின் நினைவாக ஆக்ரா கோட்டையின் முக்கிய நுழைவு வாயிலில் அவர்களது சிலைகளை நிறுவினார்.
  • சித்தூர் கைப்பற்றப்பட்டதால் மற்ற ரஜபுத்திர அரசுகளான ராந்தம்பூர், கலிஞ்சர் , பிக்கானீர் , ஜோத்பூர் , ஜெய்சால்மர் ஆகியவை தாமாகவே அக்பரிடம் சரணடைந்தன .
  • கி.பி 1573 இல் முசாபர்ஷாவிடமிருந்து குஜராத்தை கைப்பற்றினார் .
  • பீகார் வங்காளம் ஆகிய பகுதிகளை ஆண்டு வந்த தாவுத்கான் அக்பரால் தோற்கடிக்கப்பட்டு அவ்விருபகுதிகளும் 1576 இல் முகலாய பேரரசுடன் இணைக்கப்பட்டது.
  • மேவார் மற்றும் மார்வார் ஆகிய ரஜபுத்திர அரசுகள் முகலாயப் பேரரசை எதிர்த்து நின்றன.
  • அக்பர்  1576 இல் உதய்சிங்கின் மகனான ராணா பிரதாப்பை ஹால்டிகாட் போரில் வெற்றிக்கொண்டார் .
  • ராஜா மான்சிங் , பகவான்தாஸ் ஆகியோரின் உதவியுடன் மிர்சா ஹக்கீமை தோற்கடித்தார் .
  • கிபி 1586 இல் காஷ்மீரையும் 1591ல் சிந்துவையும் அக்பர் கைப்பற்றினார் .
  • 1591 இல் பாண்டேஜ் பகுதியும் கைப்பற்றப்பட்டது.
  • 1596 இல் சந்த் பீவி தோற்கடிக்கப்பட்டு பெரார் பகுதியும் கைப்பற்றப்பட்டது.
  • 1604 செப்டம்பரில் நோய்வாய்ப்பட்ட அக்பர், 1605 அக்டோபர் 27 இயற்கையை எய்தினார்.
  • அக்பரின் உடல் ஆக்ராவுக்கு அருகே சிக்கந்தராவில் நல்லடக்கம் செய்யப்பட்டது .


அக்பரின் நிர்வாக சீர்திருத்தங்கள்

  • இந்துக்களுடைய நம்பிக்கையை பெறுவதற்காக அக்பர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.
  • முஸ்லீம் அல்லாதவர் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிஸியா வரியையும் இந்துக்களின் புனித யாத்திரைகளின் மீது விதிக்கப்பட்டிருந்த வரியையும் நீக்கினார்.
  • போர் கைதிகளை அடிமையாக்கும் நடைமுறை கைவிடப்பட்டது.
  • இந்து விதவைகள் பின்பற்றிய உடன்கட்டை ஏறும் வழக்கமும் ஒழிக்கப்பட்டது. 
  • அக்பர் கல்வியை பெரிதும் ஆதரித்தார. அவரது சொந்த நூலகத்தில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்து பிரதிகள் இருந்தன .
  • தொடக்கத்தில் ஆக்ரா அக்பரின் தலைநகராக இருந்தது.பதேபூர் சிக்ரி என்னும் புதிய தலைநகரை பின்னாளில் அக்பர் உருவாக்கினார். தற்போது கைவிடப்பட்ட நகரமாக இருந்தாலும் இன்றும் அழகான மசூதிகளோடும் புலந்தர்வாசா மற்றும் ஏனைய கட்டிடங்களோடும் திகழ்கின்றது.

நிலவருவாய் முறை

  • ராஜா தோடர்மால் நிலவருவாய் முறையை சீர்திருத்தம் செய்தார்.
  • நில வருவாய் முறை ஜப்தி அல்லது பந்தோபஸ்து முறை என்று அழைக்கப்பட்டது.
  • ராஜா தோடர்மால் சீர்திருத்த முறைக்கு தாசாலா முறை என்று பெயர்.
  • பத்தாண்டு கால விளைச்சலைப் பொறுத்து நிலத்தின் வகை பிரிக்கப்பட்டது.

📊 Land Reforms

நிலம் பயிரிடக்கூடிய காலம்
போலஜ் ஆண்டு முழுக்க பயிர் விளையும் நிலம் 
பரௌதி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பயிரிடப்படுவது
சச்சார் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பயிரிடப்படுவது 
பஞ்சார் 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான ஆண்டுகளுக்கு ஒரு முறை பயிரிடப்படுவது

நவரத்தினங்கள்

  • அக்பரின் அவையை நவரத்தினங்கள் என்று அழைக்கப்பட்ட ஒன்பது அறிஞர்கள் அலங்கரித்தனர் 

🌟 Navaratnas (Nine Gems) in Akbar's Court 🌟

பெயர் பதவி குறிப்புகள்
பீர்பால் விகடகவி அக்பருக்கு மிகவும் பிடித்தவர்
மியான் இந்து பாடகர் முஸ்லிமாக மதம் மாறியவர் 
ராஜா தோடர்மால் நிதி அமைச்சர்  நிலவருவாய் சீர்திருத்தம்
அபுல் பாசல் தலைமை ஆலோசகர் அக்பர் நாமா மற்றும் அயினி அக்பரி நூலின் ஆசிரியர்
ஃபைசி தலைசிறந்த கவிஞர் இராமாயணம் மகாபாரதம் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்.
ராஜா மான்சிங் படைத்தளபதி  முகலாய பேரரசு விரிவாக்கத்திற்கு முக்கிய பங்களிப்பு. அக்பரின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதி
பகிர் அஸியோதின் ஆன்மீகவாதி மற்றும் பேரரசின் ஆலோசகர்  ஆன்மீகவாதி மற்றும் பேரரசின் ஆலோசகர் 
முல்லா தோ பியாஸா ஆலோசகர்  இவருடைய கதைகள் பிரபலமானவை
அப்துல் ரஹீம் தலைசிறந்த கவிஞர் கான்-இ-கானா என்னும் பட்டம் பெற்றவர். பைராம்கானின் மகன்.

 

 

ரஜபுத்திர கொள்கை 

  • ரஜபுத்திர அரச குடும்பங்களோடு திருமண உறவை மேற்கொள்ளுதல் மற்றும் அரசவையில் அவர்களை உயர்ந்த பதவிகளில் அமர்த்துவது என்பது ராஜ புத்திர கொள்கையாகும்.
  • அக்பருக்கு முன்னரே பல முஸ்லிம் அரசர்கள் ரஜபுத்திர இளவரசிகளை திருமணம் செய்திருந்தனர் .
  • ஆனால் அக்பர் அவர்களின் குடும்பங்களுடன் நெருக்கமான உறவினை மேற்கொண்டார்.
  • அக்பர் ஆம்பர் நாட்டு அரசர் பீகாரிமால் எனப்பட்ட ராஜா பாராமல் மகளான ஹர்க்காபாயை மணந்தார். இந்த ஹர்க்காபாயே பின்னாளில் ஜோதா அக்பர் என அழைக்கப்பட்டார்.
  • மேலும் பிக்கானீர் , ஜெய்சால்மர் ஆகிய ரஜபுத்திர இளவரசிகளையும் மணந்து கொண்டார் .
  • ஹர்க்காபாய் பெற்றெடுத்த இளவரசர் சலீம் பின்னர் ராஜா பகவான்தாஸின் மகளை மணந்தார் .
  • ராஜா பகவான்தாஸின் மகன் ராஜா மான்சிங் அக்பரின் நம்பிக்கையுடைய படைத்தளபதி ஆனார் 
  • அக்பரின் ரஜபுத்திர கொள்கை மிகச் சிறந்த இராணுவ தளபதிகளையும் சிறந்த நிர்வாகிகளையும் பேரரசுக்கு வழங்கியது .
  • வருவாய் துறை நிர்வாகத்தில் நிபுணத்துவம் உடைய ராஜா தோடர்மால் திவானாக பதவி உயர்த்தப்பட்டார். 

மன்சப்தாரி முறை 

  • அக்பர் முறைப்படுத்தப்பட்ட மைய நிர்வாக முறையை உருவாக்கினார்.
  • மன்சப்தாரி முறையை உருவாக்கினார்.
  • இதன் மூலம் ஒவ்வொருவருக்கும் மன்சப்தார் பட்டம் வழங்கப்பட்டு , பிரபுக்கள், குடிமை பணி சார்ந்த அதிகாரிகள் மற்றும் இராணுவ நிர்வாகம் சார்ந்த அதிகாரிகள் ஆகிய அனைவரும் ஒரே பணியின் கீழ் கொண்டுவரப்பட்டனர்.
  • மன்சப்தாரி தகுதி ஜாட் , சவார் என இருவகைப்பட்டது. 
  • ஜாட் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வது. எண்ணிக்கையானது 10 முதல் 10 ஆயிரம் வீரர்கள் வரை இருந்தது.
  • சவார் குதிரைகளின் எண்ணிக்கையை குறிப்பதாகும் .
  • அக்பரின் தொடக்க காலத்தில் பிரபுக்கள் மத்திய ஆசியாவை சார்ந்தவர்களாக மட்டுமே இருந்தனர்.
  • ஆனால் மன்சப்தாரி முறை மூலம் ரஜபுத்திரரும் இந்திய முஸ்லிம்களும்(ஷேக்சதா) பிரபுக்கள் வரிசையில் இடம் பெற்றனர் 
  • மன்சப்தாரிகளுக்கு ஊதியமாக பணம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக அவர்களுக்கு நிலங்களும் (ஜாகீர்) ஒதுக்கப்பட்டன. அந்நிலப்பகுதியில் வரி வசூலிக்கும் உரிமை மன்சப்தாருக்கு வழங்கப்பட்டது .
  • இது பரம்பரை உரிமை அல்ல.
  • மன்சப்தார் இறந்து விட்டால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த ஜாகீரை அரசு உடனடியாக கையகப்படுத்தும். 

அக்பரின் மத கொள்கை (தீன்இலாகி) 

  • அக்பர் வைதீக முஸ்லீம். ஆனால் சூபி தத்துவங்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக ஒரு இணக்கமான போக்கை மேற்கொண்டார்.
  • ஏனைய மதங்கள் தொடர்பான கோட்பாடுகளையும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்ட அவர் அனைவருக்கும் அமைதி (சுல்-இ-குல்) என்னும் தத்துவத்தை பரப்புரை செய்தார்.
  • மதங்களுக்கு இடையேயான தொடர்புகள் பற்றி அக்பர் மேற்கொண்ட தத்துவ விவாதங்கள் மீது வெறுப்பு கொண்ட சமகால வரலாற்று அறிஞர் பதானி அக்பர் இஸ்லாமைப் புறக்கணித்தார் என குற்றம் சாட்டினார் .
  • அக்பர் இபாதத் கானா என்னும் வழிபாட்டு கூட்டத்தை நிறுவினார்.
  • தொடக்கத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் இங்கு கூடி ஆன்மீக விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.
  • பின்னர் அக்பர் இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் கடவுள் மறுப்பாளர்களையும் விவாதங்களில் பங்கேற்க அழைத்தார்.
  • இவ்விவாதங்களால் மக்களிடையே கசப்புணர்வு ஏற்பட்டது. இதனால் 1582ல் அக்பர் இவற்றை நிறுத்தினார்.
  • அக்பர் பல்வேறு மதங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற ஞானிகளோடு தொடர்பு கொண்டு உண்மை எதுவென அறிய முயன்றார்.

1. புருஷோத்தம் , தேவி - இந்து மதம் 
2. மெகர்ஜிராணா - ஜொராஸ்திரிய மதம் 
3. அக்வாவிவா , மான்சரட் என்னும் போர்ச்சுகீசியர் - கிறிஸ்தவ மதம் 
4. ஹிர விஜயசூரி - சமண மதம் 


  • ஒரே ஒரு கடவுள் மட்டும் இருப்பதாக அவர் உணர்ந்தார். இது தீன் இலாகி(தௌகித்-இ-இலாகி) என அழைக்கப்பட்டது. இதன் பொருள் தெய்வீக ஒரு கடவுள் கோட்பாடு ஆகும்.
  • இது ஒரு புதிய மதம் அல்ல. ஆனால் சூபி மரபின் ஒரு வகை முறையாக கருதலாம். அக்பர் பீர் மதகுரு என அழைக்கப்பட்டார். அக்பர் மதகுரு என்ற அடிப்படையில் சீடர்களை சேர்த்திருந்தார். (முரிக்கள் சூபி சீடர்கள்)
  • பல்லாயிரக்கணக்கானோர் அக்பரின் சீடர்களாக சேர்ந்தனர் .
  • சமஸ்கிருத , அராபிய , கிரேக்க மற்றும் ஏனைய மொழி நூல்களை பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்வதற்காக ஒரு பெரிய மொழியாக்க துறையை அக்பர் உருவாக்கினார்.
  • இராமாயணம் , மகாபாரதம் , அதர்வவேதம் , விவிலியம் , குரான் ஆகிய அனைத்தும் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டன.
  • இராமாயணம் மகாபாரதம் - அபுல் பைசி பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்.
  • அக்பருக்கு பின்னர் தீன் இலாகி இல்லாமல் போனது.


Resources:

  • Tamilnadu Government Samacheer School Books from 6th Standard to 12th Standard

Image Attribution

"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"



  


No comments:

Post a Comment