சிவாஜி ஆட்சியில் மராத்திய நிர்வாகம்
மத்திய அரசு
அன்றாட நிர்வாகத்தில் தனக்கு உதவ அஷ்ட பிரதான் என்று அழைக்கப்பட்ட ஆலோசனை சபையை வைத்திருந்தார் சிவாஜி.
1. முக்கிய பிரதான் பேஷ்வா பிரதம மந்திரி :
- நாட்டின் பொது நலன்கள் மற்றும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவது இவரது முக்கிய கடமையாகும் .
2. அமர்த்தியா அல்லது நிதி அமைச்சர் அல்லது மஜீம்தார்
- அரசின் அனைத்து பொது கணக்குகளையும் ஆராய்ந்து ஒப்புதல் கையொப்பம் இடுவது இவரது வேலை .
3. வாக்கியனாவிஸ் மந்திரி உள்துறை அமைச்சர்
- அரசின் நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆவணங்கள் வடிவில் பராமரித்தார்.
4. சுமந்த் டாபிர் துபிர் வெளியுறவு துறை அமைச்சர்
- மன்னருக்கு போர் மற்றும் அமைதி குறித்த அனைத்து விஷயங்களிலும் ஆலோசனைகளை வழங்கினார்.
- பிற நாடுகளின் தூதர்களையும் பிரதிநிதிகளையும் வரவேற்கும் பொறுப்பையும் ஏற்றிருந்தார்.
5. சச்சிவ் சுருநாவிஸ் உள்துறை செயலர்
- அரசரின் அன்றாட கடிதப் போக்குவரத்தை கவனித்துக் கொள்ளுதல் வரைவுகளை திருத்துதல்.
- பர்கானாக்களில் கணக்குகளை சரிபார்த்தல்.
6. பண்டிட் ராவ் தனத்தியாக்சா முதாசிப் மதத்தலைவர் தலைமை அர்ச்சகர்
- மதம் தொடர்பான சடங்குகளுக்கும் தான தர்மங்களுக்கும் பொறுப்பேற்று இருந்தார். சமூகச் சட்டதிட்டங்கள் மற்றும் பொது ஒழுக்க நடைமுறைகளை நெறிப்படுத்துவதற்கு அவர் நீதிபதியாக இருந்தார்.
7. நியாயதீஷ் தலைமை நீதிபதி
- குடிமை மற்றும் ஒரு ராணுவ நீதிக்கு பொறுப்பேற்று இருந்தனர்
8. சாரிநெளபத் தலைமை தளபதி
- இராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு அமைப்பு ரீதியாக பராமரிப்பது ராணுவத்தை நிர்வாகிப்பது ஆகியவற்றை கவனித்துக் கொண்டார்.
- நியாயதீஷ் மற்றும் பண்டிட்ராவ் தவிர அனைத்து அமைச்சர்களும் ராணுவத்தை வழி நடத்துவதற்கு தலைமை ஏற்பதோடு பயணங்களுக்கும் தலைமை ஏற்க வேண்டும் .
- அனைத்து அரசு கடிதங்கள் ஆவணங்கள் ஒப்பந்தங்கள் ஆகியன அரசர் பேஸ்வா ஆகியோரின் இலச்சினையும் மற்றும் தனத்தியாக்சா நியாயதிக்சா சேனாதிபதி தவிர்த்த 4 அமைச்சர்களின் ஒப்புதலையும் பெற வேண்டும் .
- பல அமைச்சர்களின் கீழ் 18 அரசு துறைகள் இருந்தன.
மாகாண அரசு
- நிர்வாக வசதிக்காக சிவாஜி தனது பேரரசை நான்கு மாகாணங்களாக பிரித்தார் .
- மாகாணங்களில் வைஸ்ராய் எனப்படும் அரசு பிரதிநிதியை அமர்த்தினார் .
- மாகாணங்கள் பிராந்த் எனப்படும் பல பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டன .
- ஜாகீர் வழங்கும் நடைமுறை ஒழிக்கப்பட்டு அனைத்து அதிகாரங்களுக்கும் ரொக்கமாக பணம் வழங்கப்பட்டது .
- எந்த பதவியும் பரம்பரையாளர் இல்லை. பிராந்தியத்தின் செயல்பாடுகளுக்கான மையமாக கோட்டை அமைந்து இருந்தது. பாரம்பரிய படி கிராமம் என்பது நிர்வாக நடைமுறையின் கடைசி அலகாக இருந்தது.
வருவாய் நிர்வாக அமைப்பு
- நிலம் அளவீடு செய்யப்பட்டு மதிப்பிடப்பட்டது.
- மொத்த உற்பத்தியில் அரசின் உரிமையாக 30 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு அது பணமாகவோ பொருளாகவோ செலுத்தப்பட்டது .
- பின்னர் இந்த வரி 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.
- பஞ்ச காலத்தில் அரசு பணத்தையும் உணவு தானியங்களையும் உழவர்களுக்கு முன் பணம் அல்லது முன் பொருளாக கொடுத்தது. பின்னர் அவற்றை தவணை முறையில் திரும்ப செலுத்த வேண்டும். விவசாயிகள் கால்நடை வாங்க விதைப்புக்காக இன்ன பிற தேவைகளுக்காக கடன்கள் வழங்கப்பட்டன .
செளத் மற்றும் சர்தேஷ்முகி
- மராத்தியர் கை பற்றிய மாவட்டத்தின் வருவாயில் 1/4 பங்கு சவுத் என வசூலிக்கப்பட்டது.
- தேசாய்கள், தேஷ்முக்குகளின் பிரதம தலைமையாக சர்தேஷ்முக் திகழ்ந்தார்.
- மரபு வழியாக தனது நாட்டின் சர்தேஷ்முக்காக சிவாஜி விளங்கினார்.
- சர்தேஷ்முக் என்ற தகுதியின் காரணமாக சிவாஜி தனது கூடுதல் வருவாயில் 10 சதவீதத்தை சர்தேஷ்முகி என்னும் வரி மூலம் பெற்றார்.
இராணுவ அமைப்பு
- காலாட்படை குதிரை படை யானை படை ஆயுதப்படை என ராணுவத்தில் நான்கு பிரிவுகள் இருந்தன.
- படைவீரர்களுக்கு வீடு வழங்கப்பட்டது அவர்களுக்கு முறைப்படி ஊதியமும் வழங்கப்பட்டது.
- கொரில்லா போர் முறையில் வீரர்கள் சிறந்து விளங்கிய போதிலும் பாரம்பரிய போர் முறையிலும் அவர்கள் பயிற்சி பெற்றனர்.
- காலாட்படை ரெஜிமென்ட்கள் பிரிகேடுகள் என பிரிக்கப்பட்டது.
- ஒன்பது வீரர்களைக் கொண்ட சிறிய படை பிரிவுக்கு நாயக் கார்பரல் தலைமை வகித்தார்.
- சாரிநெளபத் குதிரை படையின் தலைமை தளபதியாக பதவி வகித்தார்.
- சாராநௌபத்திற்கு கீழ் ஹாஜாரிகள் பணியமர்த்தப்பட்டன. ஒவ்வொரு ஹாஜாரிக்கு கீழும் பத்து ஜமால்தாரர்கள் இருந்தனர். ஒவ்வொரு ஜமால்தாரருக்கு கீழும் ஐந்து ஹவில்தார்கள் பொறுப்பேற்றனர்.
- ஒவ்வொரு ஹவில்தார்களுக்கு கீழும் இது 25 குதிரைப்படை வீரர்கள் இருந்தனர். அவர்கள் சார்ஜண்ட் தகுதிக்கு இணையாக கருதப்பட்டனர்.
- ஒவ்வொரு குதிரை படையும் இரண்டாக பிரிக்கப்பட்டது.
- அரசு மூலமாக குதிரைகள் வழங்கப்பட்ட வீரர்கள் பர்கிர்கள் எனப்பட்டனர். தாங்களாகவே குதிரைகளை ஏற்பாடு செய்து கூலிக்கு வேலை செய்யும் வீரர்கள் ஷைலேதார்கள் எனப்பட்டனர். இது தவிர நீர் கொண்டு செல்லும் குதிரை படை வீரர்களும் குதிரைகளுக்கு லாடம் கட்டுபவர்களும் இருந்தனர்.
நீதித்துறை
- நீதி நிர்வாகம் மரபு வழிபட்டதாக இருந்தது. நிரந்தரமான நீதிமன்றங்களோ நீதி வழிமுறைகளோ இல்லை. விசாரணை முறை அனைவருக்கும் பொதுவானது .
- கிராமங்களில் பஞ்சாயத்து நடைமுறை இருந்தது.
- கிரிமினல் வழக்குகளை பட்டேல்கள் விசாரித்தனர்.
- சிவில் கிரிமினல் வழக்குகளுக்கான மேல் முறையீடுகளை தலைமை நீதிபதி நியாயதீஷ் ஸ்மிருதிகளின் ஆலோசனையோடு விசாரித்தார்.
- ஹாஜிர்மஸ்லிம் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாக இருந்தது.
- Tamil Nadu Government School Samacheer Books from 6th Standard to 12th Standard.
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
No comments:
Post a Comment